January 2, 2009

செங்கதிரோன் வந்துதித்த தேசு.

செங்குடுமிச் சேவல் சிலிர்த்துடன் கூவிடவும்
பங்கயப்பூ உள்ளம் பரவசத்தில்--பொங்கிடவும்
தங்கமென மஞ்சலெழில் தாரணியும் பெற்றிடவே
செங்கதிரோன் வந்துதித்த தேசு.

2 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது.
    "தேசு" என்றால் என்ன?
    தேசுலாவுதே தேன் மலராலே....என்ற பாட்டிலே...
    அதற்கு வண்டு அல்லது தேனீ என்ற அர்த்தமாயிருக்கும்
    என்று நினைத்தேன்.
    தேசு= மேகம்??
    உமா.

    ReplyDelete
  2. அன்பு தங்காய்!
    தேசு என்றால் ஒளி,அழகு,புகழ்,பெருமை
    இத்தனை பொருள்கள் அகராதியில் இருக்கு!
    இங்கே(ஒளி என்னும் பொருளில்) கதிரவன்
    உதய ஒளி செய்யும் அழகுக் காட்சிகள்!

    தேசுலாவுதே தேன்மலராலே என்னும்போது
    அழகு உலாவருதே எனலாமா?

    அன்புசோதரி,
    தங்கமணி.

    ReplyDelete