பனிக்கின்ற கண்ணாய் படர்கின்ற நீராய்
இனிக்கின்ற தேனாய் இசைக்கின்ற பாவாய்
நினைக்கின்ற வானாய் நிறைந்துள்ள ஈசன்
தனக்கன்பு செய்தால் தயங்காத ருள்வான்
September 23, 2009
September 2, 2009
காலை நேரக் கவிதை!
காலை நேரக் கவிதையினைக்
...காகம் தினமும் படிக்கிறது!
சோலை மணக்கும் புதுமலரால்!
...தோன்றும் விடியல் கதிரொளியால்!
பாலைப் பொழியும் பசுவினம்தான்!
...பரிவாய் அருளும் இயற்கையைப்பார்!
வேலைத் துவங்க எழுந்திடுவாய்!
...வீடும் நாடும் நலமாகும்!
...காகம் தினமும் படிக்கிறது!
சோலை மணக்கும் புதுமலரால்!
...தோன்றும் விடியல் கதிரொளியால்!
பாலைப் பொழியும் பசுவினம்தான்!
...பரிவாய் அருளும் இயற்கையைப்பார்!
வேலைத் துவங்க எழுந்திடுவாய்!
...வீடும் நாடும் நலமாகும்!
'தய்ய தானன.. தனதான'
வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்வ தேஉன.. தருளாகும்!
தைய லாளுமை.. இடமாகி
...சைவ மாதிரு.. மறையோதும்
துய்ய நேசிவ.. பரமேச!
...சொல்லு வேனுன.. தெழிலாடல்!
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்வ தேஉன.. தருளாகும்!
தைய லாளுமை.. இடமாகி
...சைவ மாதிரு.. மறையோதும்
துய்ய நேசிவ.. பரமேச!
...சொல்லு வேனுன.. தெழிலாடல்!
Subscribe to:
Posts (Atom)