February 8, 2010

கழல் அருளுமே!

தணலுருவினன் குணங்குறியிலன் அணைந்தருள்செயும் சிவனவன்
கணமவனுரு உணர்வதிலுறு துணைதருமுயர் மணியவன்
பிணமெரிநிண மணசுடலையில் இணையிலிநடம் புரிகுவன்
ரணமிகுஇரு வினைமுரணழி இணைகழல்பிணை அருளுமே!

3 comments:

  1. முந்தைய பாட்டு நடராசரை அழகாய் மனக்கண்முன் கொண்டுவந்தது, இதுவோ அவரை சற்றே சீற்றத்துடன் காட்டுகிறது! இரண்டும் நன்றே! சிறக்க நின் நாளே!

    ReplyDelete
  2. அன்புள்ள விஜய்!
    உன் அழகான கருத்துக்கு,மிக்க நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  3. இருவகை நடனங்கள் கண்ணெதிரே காட்டிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete