சிறையெனு கருவறை சிறுமையு மழியும்
..சிவசிவ எனவுரை! சிதறிடும் துயரே!!
முறையெது மறிகிலை! மொழிவது மவனின்
..முடிமுத லடிவரை முழுமுத லுருவே!
குறைமதி புனைசடை குழையணி இறைவன்
..குரைகழல் நடமிதில் குவிமன மடைய
மறைதொழு சிவனடி மலரிணை விழைவாய்!
..வளமிகு திருவினை வரமென அடைவாய்!
No comments:
Post a Comment