November 21, 2008

உயர்ந்திடு!

உயர்ந்திடு!

நாளை என்று தள்ளி டாது
..நன்றினை புரிந்திடு!
வேளை தோறும் செய்யும் வேலை
..விரும்பியே முடித்திடு!
கேள்வி யின்றி உண்மைகள்
..கிட்டு மோதான் நன்மைகள்!
தோளு யர்த்தி தேசம் காக்கும்
..தொண்டி நாலே உயர்ந்திடு!


அன்புடன்,
தங்கமணி.

No comments:

Post a Comment