August 3, 2008

இன்பம்!

..
தென்றலினில் தலையாட்டிச் சின்னமலர் அசைவினிலே
...சிறுமழலை சிந்தும்பூஞ் சிரிப்பதின்பம்!
கன்றுதுள்ளிப் பாய்ந்தோடிக் களித்தாடி தனதனையைக்
...கனைத்தழைத்துத் தேடுகின்ற குரலதின்பம்!
குன்றதனில் தண்டுகொண்ட குமரனைதன் குருவெனவே
...கொண்டாடும் சிவனருளை நினைப்பதின்பம்!
என்றுமுள இயற்கைதரும் எழிலதனில் உளமுருகி
...இன்தமிழில் கவியியற்றித் திளைப்பதின்பம்!

அனை = அன்னை (இடைக்குறை)

அன்புடன்,
தங்கமணி.

1 comment:

  1. இன்பம் இன்பம்..
    இறைவனை.. நினைப்பது இன்பம்..
    அதனினும்.. இன்பம்..
    தங்கமணி.. கவிதை தேன் இன்பம்....

    ReplyDelete