January 6, 2010

சிவன் பூங்கழல் !


விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)

3 comments:

  1. கந்த பத்யம்??? புதுசா இருக்கு. கொஞ்சம் விளக்க முடியுமா???

    ReplyDelete
  2. அன்புள்ள கீதா!பொங்கல்நல் வாழ்த்துகள்!
    'கந்தபத்யம்'பற்றி,திரு.சிவசிவா கொடுத்துள்ள
    விளக்கம் காணவும்.பதிகம் பாடியுள்ளா
    ர்.சிவாவுக்கு என் நன்றி!
    ஒரு பாடலுக்கே திணறித் தவறுகள் செய்து முயன்றேன்.


    கந்த பத்யம் - kanda padyam
    ---------------------------------
    இது தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை.
    இதன் இலக்கணம் (நான் அறிந்த அளவில்):
    1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
    2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
    லகு = குறில் = 1 மாத்திரை = "I"
    குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"

    3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்பு இப்படி இருக்கவேண்டும்:
    W X W
    X W Y W Z
    W X W
    X W Y W Z

    இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:

    X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIII IIU IUI UII UU

    W = "IUI" (லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த
    ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIII IIU UII UU


    Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும்
    வரலாம் - அதாவது -
    IIII IUI

    Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIU UU

    4) எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே எதுகை அமைய வேண்டும்.
    5) மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.

    ReplyDelete
  3. அன்புள்ள கீதா!பொங்கல்நல் வாழ்த்துகள்!
    'கந்தபத்யம்'பற்றி,திரு.சிவசிவா கொடுத்துள்ள
    விளக்கம் காணவும்.பதிகம் பாடியுள்ளா
    ர்.சிவாவுக்கு என் நன்றி!
    ஒரு பாடலுக்கே திணறித் தவறுகள் செய்து முயன்றேன்.


    கந்த பத்யம் - kanda padyam
    ---------------------------------
    இது தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை.
    இதன் இலக்கணம் (நான் அறிந்த அளவில்):
    1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
    2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
    லகு = குறில் = 1 மாத்திரை = "I"
    குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"

    3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்பு இப்படி இருக்கவேண்டும்:
    W X W
    X W Y W Z
    W X W
    X W Y W Z

    இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:

    X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIII IIU IUI UII UU

    W = "IUI" (லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த
    ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIII IIU UII UU


    Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும்
    வரலாம் - அதாவது -
    IIII IUI

    Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
    IIU UU

    4) எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே எதுகை அமைய வேண்டும்.
    5) மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.

    ReplyDelete