
(அரையடி-- மா காய் காய்)
> வெள்ளித் தகடெனவே விண்வெளியில்
> ...மிளிரும் வடிவழகே! வெண்ணிலவே!
> கொள்ளை இளமையுடன் கூடிடுவாய்!
> ...கோடி யுகங்களிலும் தோன்றிடுவாய்!
> துள்ளும் சிறுவயதில் சொந்தமடி!
> ...துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்!
> உள்ளம் களித்திருப்பேன் நீவருவாய்!
> ...உருவில் குறைந்துவளர் வெண்ணிலவே!
> அன்புடன்,
> தங்கமணி.
Good blogging
ReplyDeleteதுணையாய் முதுமையிலும் வந்திடுவாய்.....
ReplyDeleteரொம்ப உண்மை...
தாரமங்கலத்தில் தூக்கம் வராமல் தொட்டிமுற்றத்தில் பார்த்த அதே நிலவை
சியாட்டலிலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உமா.
Thanks for your appreciation.
ReplyDeleteanbudan,
thangamaNi.